Kovil

திருகோணமலை – அருள்மிகு விசுவநாதசுவாமி சிவன் திருக்கோயில்

Posted on

கிழக்கு மாகாணம் – திருகோணமலை மாவட்டம், திருகோணமலை நகரம் அருள்மிகு விசுவநாதசுவாமி சிவன் திருக்கோயில்

வேதனைகள் களைந்தெம்மை ஆளவந்த சிவனே
அன்பு நிறை வாழ்வினையே எமக்களிப்பாய் ஐயா
அல்லல் தரும் கொடுநிலைமை எமக்கென்றும் வேண்டாம்
ஆறுதலைத் தந்திடுவாய் விசுவநாதசுவாமி

திருகோணமலை நகரில் கோயில் கொண்ட சிவனே
நிறைவான பெருவாழ்வை எமக்களிப்பாய் ஐயா
இன்னல் தரும் கொடியவர்கள் உறவு எமக்கென்றும் வேண்டாம்
ஆறுதலைத் தந்திடுவாய் விசுவநாதசுவாமி

உயிர்களுக்குள் உயிராக இருப்பவனே சிவனே
நேர்மை நிறை வாழ்வினையே எமக்களிப்பாய் ஐயா
அழுக்காறு கொண்ட மனம் எமக்கென்றும் வேண்டாம்
ஆறுதலைத் தந்திடுவாய் விசுவநாதசுவாமி

அண்டமெல்லாம் காத்தருளும் காவலனே சிவனே
அச்சமில்லா நேர்வழியை எமக்களிப்பாய் ஐயா
ஆணவம் கொண்ட மனம் எமக்கென்றும் வேண்டாம்
ஆறுதலைத் தந்திடுவாய் விசுவநாதசுவாமி

கோணநகர் குடிகொண்டு குலம் காக்கும் சிவனே
கொடுமையில்லா வாழ்வினையே எமக்களிப்பாய் ஐயா
அவா கொண்டு அலையும் மனம் எமக்கென்றும் வேண்டாம்
ஆறுதலைத் தந்திடுவாய் விசுவநாதசுவாமி

கிழக்கிலங்கை கோயில் கொண்டு உறைகின்ற சிவனே
கிலேசமில்லா பெருவாழ்வை எமக்களிப்பாய் ஐயா
குரோதம் கொண்ட மனம் வேண்டாம்
ஆறுதலைத் தந்திடுவாய் விசுவநாதசுவாமி.

ஆக்கம்- த.மனோகரன்.
துணைத் தலைவர்,
அகில இலங்கை இந்து மாமன்றம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular

Exit mobile version