Kovil

பாணதுறை – அருள்மிகு கந்தசுவாமி திருக்கோயில்

மேல்மாகாணம் – களுத்துறை மாவட்டம் – பாணதுறை நகரம் அருள்மிகு கந்தசுவாமி திருக்கோயில்

வேல் தாங்கி நின்றிருந்து அருளுகின்ற வேலவனே

வேதனைகள் அண்டா நிலை அருளிடவே வாருமைய்யா

வருந்தடைகள் நீக்கிடவே உடனிருந்து காத்திடுவாய்

பாணதுறை நகர் கோயில் கொண்ட கந்தசுவாமிப் பெருமானே

ஆறுமுகம் கொண்டிருந்து அன்பளிக்கும் வேலவனே

ஆற்றல் என்றும் அளித்திடவே விரைந்து நீ வாருமைய்யா

அச்ச நிலை நீங்கிவிட உடனிருந்து காத்திடுவாய்

பாணதுறை நகர் கோயில் கொண்ட கந்தசுவாமிப் பெருமானே

நம்பித் தொழும் பக்தர்களின் நலன்காக்கும் வேலவனே

நிம்மதியை பெறும் நிலை பெற்றுவிட அருளிடவே வாருமைய்யா

பகைமை நிலை அகன்றிடவே உடனிருந்து காத்திடுவாய்

பாணதுறை நகர் கோயில் கொண்ட கந்தசுவாமிப் பெருமானே

 

பன்னிரு கரங்கள் கொண்டு அணைத்தருளும் வேலவனே

பரிதவியா நிலை பெற்றிடவே அருளிடவே வாருமைய்யா பரிசுத்தம் நிலைத்துவிட உடனிருந்து காத்திடுவாய்

பாணதுறை நகர் கோயில் கொண்ட கந்தசுவாமிப் பெருமானே

 

வள்ளி தெய்வானையரை அருகு கொண்ட வேலவனே

வளமைகுன்றா நிலை பெற்றுவிட அருளிடவே வாருமைய்யா வீண்துன்பம் தொடராது அகன்றிடவே உடனிருந்து காத்திடுவாய்

பாணதுறை நகர் கோயில் கொண்ட கந்தசுவாமிப் பெருமானே

 

மேற்கிலங்கை கரையினிலே வீற்றிருக்கும் வேலவனே

மேன்மைமிகு பெருவாழ்வு பெற்றுவிட அருளிடவே வாருமைய்யா

மோதலில்லா அமைதிநிலை அடைந்திடவே உடனிருந்து காத்திடுவாய்

பாணதுறை நகர் கோயில் கொண்ட கந்தசுவாமிப் பெருமானே.

 

ஆக்கம் – த.மனோகரன்.

துணைத் தலைவர் ,

அகில இலங்கை இந்து மாமன்றம்.

Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular

To Top