Kovil

திருகோணமலை அருள்மிகு ஸ்ரீ பத்திரகாளி அம்மன் திருக்கோயில்

கிழக்கு மாகாணம் – திருகோணமலை மாவட்டம், திருகோணமலை நகர் அருள்மிகு ஸ்ரீ பத்திரகாளி அம்மன் திருக்கோயில்

திருகோணமலை யமர்ந்து திருவருளைத் தருந்தாயே
திசையெங்கும் உன்கருணை நீக்கமற நிறைந்திடவே
பார்போற்றும் தாயவளே தாள் பணிந்து துதிக்கின்றேன்
பார்வையினை எம்மீது செலுத்திடுவாய் பத்திரகாளியம்மாவே

கிழக்கிலங்கை எழுந்தருளி கிலேசமதை அறுப்பவளே
கிட்டிவரும் வேதனைகள் எட்டியெமை விலக்கிடவே
நத்தியுந்தன் அடிபணிந்து நாளெல்லாம் இறைஞ்சுகின்றோம்
நாயகியே எம்மீது கருணை கொள்வாய் பத்திரகாளியம்மாவே

ஞாலமெல்லாம் நன்மைபெற அருளுகின்ற பேரருளே
ஞானம் நிறை நல்லறிவு புவியெங்கும் நிறைந்திடவே
தாயாக இருந்து எம்மை வழி நடத்த அழைக்கின்றோம்
தரணியெங்கும் அமைதியுற வரமளிப்பாய் பத்திரகாளியம்மாவே

அன்பு நிறை பேரருளே அணைத்தருளும் திருமகளே
அல்லல் களைந்தெமது அமைதி நிலை நிலைத்திடவே
வல்லமை தந்தருளும் மாசில்லா அடி பணிகின்றோம்
வந்தெமது துயர் போக்கி வளமளிப்பாய் பத்திரகாளியம்மாவே

செழுமைமிகு திருமலையின் கடல் மருங்கில் அமர்ந்தவளே
செம்மை தரும் நல்வாழ்வு சீர்மைபெற்று நிலவிடவே
கருணை கொண்டு காட்சி தர வாவென்று கூவுவுகிறோம்
காலமெல்லாம் நல்வழியைக் காட்டியருள் பத்திரகாளியம்மாவே

ஆதரவு தந்தெம்மை அரவணைக்கும் எம்தாயே
அச்சமில்லா வாழ்வென்றும் எமக்காக்கிவிட்டிடவே
உறுதி தந்து உறுதி செய்து காத்தருள வேண்டுகிறோம்
என்றுமுடனிருந்து அரவணைப்பாய் பத்திரகாளியம்மாவே.

ஆக்கம்- த.மனோகரன்.
துணைத் தலைவர்,
அகில இலங்கை இந்து மாமன்றம்.

Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular

To Top