Kovil

நாவலப்பிட்டி, ஹப்புகஸ்தலாவ – அருள்மிகு கருணாகரப் பிள்ளையார் திருக்கோயில்

மத்திய மாகாணம் – நுவரேலியா மாவட்டம், (நாவலப்பிட்டி) ஹப்புகஸ்தலாவ – அருள்மிகு கருணாகரப் பிள்ளையார் திருக்கோயில்

ஐந்து கரங்கொண்டு அரவணைக்கும் பெருமானே
அச்சமகற்றி நல்வாழ்வை நிலையாகத் தந்திடுவாய்
மகிழ்வு நிறை வாழ்வினையே நாம் என்றும் பெற்றுவிட
துணையிருப்பாய் ஹப்புகஸ்தலாவ கோயில் கொண்ட கருணாகரப் பிள்ளையாரே

மத்திய மலையகத்தில் இருந்தருளும் பெருமானே
மாசில்லா நல்வாழ்வை என்றுமே தந்திடுவாய்
தளர்வில்லா நிறை வாழ்வை நாம் என்றும் பெற்றுவிட
துணையிருப்பாய் ஹப்புகஸ்தலாவ கோயில் கொண்ட கருணாகரப் பிள்ளையாரே

இன்பமே தந்தெமக்கு எழுச்சி தரும் பெருமானே
மாநிலத்தில் உயர்வாழ்வை வாழவழி செய்திடுவாய்
உறுதி நிறை மனநிலையை என்றுமே பெற்றுவிட
துணையிருப்பாய் ஹப்புகஸ்தலாவ கோயில் கொண்ட கருணாகரப் பிள்ளையாரே

பார்வதியின் திருமகனாய் அவதரித்த பெருமானே
பாரிலுள்ளோர் மகிழ்ச்சியுடன் வாழவழி செய்திடுவாய்
குறைவில்லா நிறை வாழ்வை என்றுமே பெற்றுவிட
துணையிருப்பாய் ஹப்புகஸ்தலாவ கோயில் கொண்ட கருணாகரப் பிள்ளையாரே

தந்தைதாய் பெரியரென்று தரணிக்குரைத்த பெருமானே
திறமையுடன் நாம் வாழவழியை நீ செய்திடுவாய்
துணை கொண்ட நிறை வாழ்வை என்றுமே பெற்றுவிட
துணையிருப்பாய் ஹப்புகஸ்தலாவ கோயில் கொண்ட கருணாகரப் பிள்ளையாரே

உலகெல்லாம் ஆளுகின்ற இணையில்லாப் பெருமானே
உயிருக்குள் உயிராக இருந்து வாழவழி செய்திடுவாய்
உறவு கொண்ட நிறைவாழ்வை என்றுமே பெற்றுவிட
துணையிருப்பாய் ஹப்புகஸ்தலாவ கோயில் கொண்ட கருணாகரப் பிள்ளையாரே.

ஆக்கம்- த.மனோகரன்.
துணைத் தலைவர்,
அகில இலங்கை இந்து மாமன்றம்.

Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular

To Top