Kovil

மட்டக்களப்பு, களுதாவளை – அருள்மிகு களுதாவளை பிள்ளையார் திருக்கோயில்

கிழக்கு மாகாணம் – மட்டக்களப்பு மாவட்டம், களுதாவளை, அருள்மிகு களுதாவளை பிள்ளையார் திருக்கோயில்

கிழக்கிலங்கை கோயில் கொண்டு கருணைமழை பொழிபவரே
கிலேசமில்லா மனநிலையை எமக்கென்றும் அருளிடுவாய்
என்றும் எமைக் காத்தருளி நிறைவாழ்வைத் தந்திடைய்யா
களுதாவளை அமர்ந்தருளும் பேரருளே பிள்ளையாரே

பெற்றவர்கள் பெருமையினை உலகுக்கு உணர்த்தியவரே
பெருமைமிகு எதிர்காலம் எமக்கென்றும் அருளிடுவாய்
நல்வழியைக் காட்டி நல்வாழ்வைத் தந்திடைய்யா
களுதாவளை அமர்ந்தருளும் பேரருளே பிள்ளையாரே

நம்பி வந்து அடிபணிவோர் நலன் காக்கும் உத்தமனே
நானிலத்தில் நலம் வாழ எமக்கென்றும் அருளிடுவாய்
தொல்லையில்லா வாழ்வு தந்து உயர்வாழ்வைத் தந்திடைய்யா
களுதாவளை அமர்ந்தருளும் பேரருளே பிள்ளையாரே

உடனிருந்து நலன் தந்து காவல் செய்யும் காவலரே
உறவுகளோடிணைந்திருக்க எமக்கென்றும் அருள்செய்வாய்
உரிமையுடன் வாழவழி என்றும் எமக்குத் தந்திடைய்யா
களுதாவளை அமர்ந்தருளும் பேரருளே பிள்ளையாரே

தமிழ் மண்ணில் நிலைகொண்டு எமையாளும் சிவன்மகனே
தளராத மனம் கொண்டு நாம் வாழ அருளிடுவாய்
நேர்மையுடன் முன்னேற ஏற்றவழி தந்திடைய்யா
களுதாவளை அமர்ந்தருளும் பேரருளே பிள்ளையாரே

தீவினைகள் போக்கியெம்மை அணைத்தருளும் உமைமகனே
தீராத நோய் நொடிகள் அண்டா வழி தந்திடுவாய்
ஏற்றமிகு நல்வாழ்வை பெற வழி தந்திடைய்யா
களுதாவளை அமர்ந்தருளும் பேரருளே பிள்ளையாரே.

ஆக்கம் – த.மனோகரன்.
துணைத் தலைவர்,
அகில இலங்கை இந்து மாமன்றம்.

Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular

To Top