Kovil

கொழும்பு கொம்பனித்தெரு, அருள்மிகு சிவசுப்பிரமணிய சுவாமி திருக்கோயில்

Posted on

மேல் மாகாணம்- கொழும்பு மாவட்டம்- கொழும்பு மாநகரம் கொம்பனித்தெரு, அருள்மிகு சிவசுப்பிரமணிய சுவாமி திருக்கோயில்

கொழும்பு மாநகர் தனிலே கோயில் கொண்ட வேலவனே
குறைகளைந்து நலமளிக்க வந்திடைய்யா
கூடிவரும் நன்மைகளைத் தேடி எமக்கருளிடுவாய்
கொம்பனித் தெரு வீற்றிருக்கும் சுப்பிரமணிய சுவாமியே சரணம் ஐயா

அருள் பொழிந்து அரவணைத்து ஆளுகின்ற வேலவனே
அமைதி நிறை வாழ்வளிக்க உடனிருந்து உதவிடைய்யா
ஆற்றல் மிகு மனவலிமை பெற்றுவிட எமக்கருளிடுவாய்
கொம்பனித் தெரு வீற்றிருக்கும் சுப்பிரமணிய சுவாமியே சரணம் ஐயா

எழுச்சிமிகு மனநிலையை எமக்களிக்கும் வேலவனே
ஏற்றமிகு நல்வாழ்வை எமக்களிக்க வந்திடைய்யா
ஆறுதலைத் தந்தெம்மைக் கூடிவாழ எமக்கருளிடுவாய்
கொம்பனித் தெரு வீற்றிருக்கும் சுப்பிரமணிய சுவாமியே சரணம் ஐயா

மயிலேறி உலகளந்த மாமணியே வேலவனே
மாண்புமிகு வாழ்வதனை எமக்களிக்க வந்திடைய்யா
நிம்மதியை நிரந்தரமாய் பெற்றுவிட எமக்கருளிடுவாய்
கொம்பனித் தெரு வீற்றிருக்கும் சுப்பிரமணிய சுவாமியே சரணம் ஐயா

சிவனாரின் திருமகனாய் அவதரித்த வேலவனே
சித்தத்தில் நீயுறைந்து வழிகாட்ட வந்திடைய்யா
உடல் நலமும் உளநலமும் கூடிவர எமக்கருளிடுவாய்
கொம்பனித் தெரு வீற்றிருக்கும் சுப்பிரமணிய சுவாமியே சரணம் ஐயா

வேல் தாங்கி நின்றிருந்து அருள் வழங்கும் வேலவனே
வீரமிகு மனம் தந்து வழிகாட்ட வந்திடைய்யா
வெற்றி மிகு வாழ்வினையே நாமடைய எமக்கருளிடுவாய்
கொம்பனித் தெரு வீற்றிருக்கும் சுப்பிரமணிய சுவாமியே சரணம் ஐயா.

ஆக்கம்- த.மனோகரன்.
துணைத் தலைவர்,
அகில இலங்கை இந்து மாமன்றம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular

Exit mobile version