Kovil
கொழும்பு – பண்டாரநாயக்க மாவத்தை அருள்மிகு சிவசுப்பிரமணியர் சுவாமி திருக்கோயில்
மேல் மாகாணம் – கொழும்பு மாவட்டம் – கொழும்பு மாநகரம் – பண்டாரநாயக்க மாவத்தை அருள்மிகு சிவசுப்பிரமணியர் சுவாமி திருக்கோயில்
காலமெல்லாம் உடனிருந்து காத்தருளும் பெருமானே
வாழவழி காட்டி யெம்மை வழிப்படுத்த வேண்டுமைய்யா
உறுதியுடன் நாம் வாழ உரியவழி காட்டிடைய்யா
கொழும்பு மாநகருறையும் சிவசுப்பிரமணியப் பெருமானே
வரும் துன்பம் தடுத்தெமக்கு காவல் தரும் பெருமானே
வளமான பெருவாழ்வு வாழ வழிப்படுத்த வேண்டுமைய்யா
நலமுடனே நாம் வாழ உரிய வழி காட்டிடைய்யா
கொழும்பு மாநகருறையும் சிவசுப்பிரமணியப் பெருமானே
அல்லல் தடுத்தெம்மை ஆதரிக்கும் பெருமானே அமைதி மனம் தந்தெம்மை வழிப்படுத்த வேண்டுமைய்யா
அன்பு மனம் கொண்டவராய் வாழ வழி காட்டிடைய்யா
கொழும்பு மாநகருறையும் சிவசுப்பிரமணியப் பெருமானே
திருப்புகழால் பாடல் பெற்ற தெய்வமே பெருமானே
திக்கெங்கும் நிம்மதியே பதியவழிப்படுத்த வேண்டுமைய்யா
தோல்வியில்லா வாழ்வு கொண்டு வாழ வழி காட்டிடைய்யா
கொழும்பு மாநகருறையும் சிவசுப்பிரமணியப் பெருமானே
கதிர்காமத் திருத்தலத்தில் இருந்தருளும் பெருமானே
கதிரொளிபோல் நல்லருள் பரப்பி வழிப்படுத்த வேண்டுமைய்யா
குறையில்லா மனத்தினராய் வாழ வழி காட்டிடைய்யா
கொழும்பு மாநகருறையும் சிவசுப்பிரமணியப் பெருமானே
அதர்மத்தை அழித்தொழிக்க அவதரிக்கும் பெருமானே
அஞ்சாத மனம் தந்து வழிப்படுத்த வேண்டுமைய்யா
இன்பம் நிறை மனத்தினராய் வாழ வழி காட்டிடைய்யா
கொழும்பு மாநகருறையும் சிவசுப்பிரமணியப் பெருமானே.
ஆக்கம் – த.மனோகரன்.
துணைத் தலைவர்,
அகில இலங்கை இந்து மாமன்றம்.